கள்ளிமலர்

A tale of a cactus flower..

Sunday, August 15, 2010

அரசியல்


மிகப்பெரிய தலைவர்களெல்லாம் பங்குகொண்டு அரசியல் பணியாற்றிய அந்தகால  அரசியலுக்கும் இன்றைய குடும்ப அரசியல் முறைக்கும்  உள்ள  மிகப்பெரிய வித்தியாசத்தை  நாடே அறிந்திருந்தாலும்,  தேர்தல் நேரத்தில் கிடைக்கும் ஒரு சிறு  அன்பளிப்பிற்காக  நாம் நம் வாக்குகளை  விற்று  மீண்டும் மீண்டும் ஒரு கொள்ளையர்  கூட்டத்தை  அரியணையில்  ஏற்றி  அழகுபார்க்கும் இந்த நேரத்தில், இன்றைய அரசியல் எப்பேற்பட்டது  என்பதையும் நாம் சற்று சிந்தித்துப் பார்க்கக் கடமைப் பட்டிருக்கிறோம். 
  
அரசியல்

முரண்பாடுகளின் மொத்த உருவம்
முள்ளமாரிகளின் பள்ளிக்கூடம்
கொள்ளைக்காரர்களின் கூடாரம்
கொலைகாரர்களின் கூட்டுறவுச்சங்கம்

மணல் கொள்ளையரின் மாமன்றம்
அரிசி கடத்துபவருக்கு அடைக்கலம்
கருப்புபண புள்ளிகளுக்கு கடவுள்
சிகப்புவிளக்கு புள்ளிகளுக்கு காவல்

போலிமருந்து வியாபாரியின் பாசறை
போலிமருத்துவர்களுக்கு பாதுகாவல்
போலிச்சான்றிதழ்  செய்வோருக்கு புகலிடம்
போலிச்சாமியாரின் விளம்பர ஊடகம்

தமிழை விற்பவரின் அங்காடிதெரு
பதவியை வாங்குபவரின் சந்தை
பத்திரிக்கைகளின் கொடும் பகைவன்
பாதகர்களின் உயிர்ப் பாதுகாவலன்

தேர்தல் திருவிழாவின் நாயகன்
ஓட்டுக்களை விலைபேசும் வியாபாரி
ஊழல் திமிங்கலத்தின் பெரும்கடல்
உத்தம தலைவர்களுக்கு சுனாமி

மண்பிறந்த தீயோர்கள் கூடுமிடம்
மனசாட்சி இல்லாதோர் மாளிகை
அதிகார வெறியர்களின் அரண்மனை
அத்தனைக்கும் பெயர்தான் அரசியல்.

அன்புடன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home