கள்ளிமலர்

A tale of a cactus flower..

Tuesday, August 3, 2010

ஒழிப்போம் குழந்தை தொளிலாலர்முறையை இன்றே!


வறுமையின் காரணாமாக சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளிசெல்லும் பருவத்திலேயே கடுமையான வேலைக்கு அனுப்புகிறார்கள். அந்த பிஞ்சுக் குழந்தைகள் மூலம் இன்று ஒரு சிறு வருமானம் கிடைப்பது இனிமையாக இருந்தாலும், சற்று நினைத்துப் பாருங்கள் அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை? நாளைய சரித்திரத்தை மாற்றி எழுதப் பிறந்த மிகப்பெரிய ஆற்றல் மிக்க தலைவனாகவோ, பல அறிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வந்த அறிவியல் விஞ்ஞானியாகவோ, பெரிய கவிஞராகவோ, வல்லுனராகவோ, ஆசிரியராகவோ, சொல்லிக்கொண்டே போகலாம்...இப்படி ஏதோ ஒரு சிறப்புக்குச் சொந்தக்காரகள் இன்றைய குழந்தைகள். அவர்களின் அறிவுக்கண்ணை அடைத்து, பொருள் ஈட்ட வேண்டி வேலைக்கு அனுப்புவது நியாயமா? சிந்தித்து பாருங்கள் பெற்றவர்களே!

ஒழிப்போம் குழந்தை தொளிலாலர்முறையை இன்றே!

இருள் நீக்க வேண்டி நல்ல கல்வியை கற்க
இனிதே தினம் பள்ளிசெல்லும் குழந்தைகளை
பொருள் ஈட்ட வேண்டி நீங்கள் முடிவெடுத்து
பொறுப்பற்று அனுப்பலாமா வேலைகள் செய்ய?

அறிஞராய், தலைவராய், அறிவியல்மேதையாய்
அடக்குமுறைதனை உடைக்கும் போராளியாய்
வளர்ந்திடும் குழந்தைகள் நல் வழிதனை மறித்து
வற்புறுத்தல் ஆகுமா பொருள் ஈட்ட பணித்து?

புத்தகத்தின் பாரத்தை சிரமப்பட்டே, பிள்ளை
தினம்தோறும் பள்ளிக்கு எடுத்துச் செல்ல
குடும்பத்தின் பாரத்தை தூக்கச் சொல்லி - நீங்கள்
குழந்தையிடம் முறையிட்டால்  அது சரியோ?

எதிர்கால சரித்திரத்தை மாற்றி எழுதிடும்
ஏற்றமிகு தலைவனாக பிறந்த பிள்ளையை
நிகழ்கால வறுமைதன்னை நினைத்தே நீவிர்
தொழில் செய்து பொருள் ஈட்ட அனுப்பலாமோ?

பெற்றவர்கள் உங்கள் துன்பத்தை போக்க, ஆளும்
கொற்றவனும் நினைத்திடான், ஆனாலும் நீங்கள்
பெற்றபிள்ளை போக்கிடுமே, புகழ் உச்சியில்-உமை
ஏற்றிவைத்து போற்றிடுமே!  பெருமை சேர்த்திடுமே!

மறவாதீர் பெற்றோரே மறவாதீர் என்றென்றும்
குழந்தை தொளிலாலர்முறை ஓர் இழிமுறை.
அனுப்புவோம் குழந்தைகளை பள்ளிக்கு நன்றே
ஒழிபோம் குழந்தைதொளிலாளர் முறையை இன்றே!

அன்புடன் பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home