கள்ளிமலர்

A tale of a cactus flower..

Wednesday, May 19, 2010

நேதாஜியே! பிறந்துவிடு மீண்டும்..

























தமிழீழ தேசிய தலைவரின் மனம் கவர்ந்த மாவீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களை நினைத்து எழுதியது..

நேதாஜியே! பிறந்துவிடு மீண்டும்..


வங்கத்தில் பிறந்த சிங்கமே!
வான்புகழ் கொண்ட தங்கமே!
தென்திசை மறத்தமிழர் வீரத்தை
திக்கெட்டும் போற்றிடச் செய்தோனே!

பாரதத்தாயின் புகழுக்கு -அன்று
பறங்கியர் கூட்டத்தால் களங்கம் வர
ஆயுதம் தாங்கிய அணியொன்று அமைத்து
பாயும் புலிபோல் பாய்ந்தவனே!

கடற்கரையில் உப்பு காய்ச்சி
கம்படி வாங்கி கண்ணீர்விட்ட
கயவர் கூட்டம் விட்டு பிரிந்து - வீர
கம்பீர படையொன்று அமைத்தவனே!

வெள்ளையர் என்னும் விடமிகு
புல்லையர் கூட்டத்தை அழித்திட
நெஞ்சம் நிமிர்த்தி போரிட்ட -எங்கள்
நேதாஜியே! வீரத்தளபதியே!

சிங்கம் நீ இல்லாத தேசத்தில்
சில சிறுநரிகள் ஆடியது ஐம்பதாண்டு.
இறுதியில் அந்த பாதகர் கை வீழ்ந்து,
ஒருநாள் வெற்றித்தாமரை மலர்ந்தது.

அந்தோ பரிதாபம்! இன்னும் அந்த
அடிமைக்கூட்டம் திருந்தவில்லை
பறித்து வீசியது வெற்றித்தாமரையை
பதவியில் ஏற்றியது வெள்ளைக்காரியை

அடிமைக்கூட்டத்தின் ஆட்டம் அடக்கிட,
வெள்ளை தலைமையின் வேரை அறுத்திட,
வேந்தனே! வீரமிகு வேங்கையே! -நீ
வந்துவிட வேண்டும். பிறந்துவிடு மீண்டும்.

அன்புடன்
பாலா வானுமாமலை

1 Comments:

Anonymous Anonymous said...

very nice kallimalar.
good luck.

May 28, 2010 at 11:05 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home