கள்ளிமலர்

A tale of a cactus flower..

Friday, August 27, 2010

தமிழ் "மரப்போராளி"


தன் சுய நலனுக்காகவும், தன் இன நலனுக்காகவும் வானுயர்ந்த மரங்களை வெட்டி வீழ்த்துபவர்களுக்கு, மரங்கள் பதில் தாக்குதல்கள் நடத்தினால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை விளக்க முற்பட்டபோது கற்பனையில் உதித்த வரிகள்..இதோ உங்களுக்காக...

தமிழ் மரப்போராளி

தானுயர்ந்து அரசியலில் சிறப்படைய
தன்சாதி கூட்டமொன்றை கூட்டினார்
வானுயர சாலையோரம் வளர்ந்திருந்த
வடிவான மரத்தையெல்லாம் வெட்டினார்

பார் மறந்து பலவருடம் ஆனபோது
பாசாங்காய் மரம் நட்டார் தெருவெங்கும்
ஊரெங்கும் நட்டமரம் வளர்ந்த போது
உள்ளூர தினம்தோறும் அவை  புலம்பியது

தேர்தலிலே தோல்விகண்ட காரணத்தால்
திரும்பவும் ஓர் போராட்டம் செயவேண்டி
பார்தனிலே தான் நட்ட மரத்தையெல்லாம்
பதம்பார்க்க தலைவர் இட்ட ஆணையினால்

தங்கள் கதி என்னவாகும் என்று எண்ணி
தவித்தனவே மரங்களெல்லாம் எப்போதும்
மருதமரம் முடிவாகப் பேசியது - தன்
மனதிலுள்ள திட்டம் ஒன்றை கூறியது

குடும்பத்தோடு கோவில் செல்ல வேண்டி
கும்மிருட்டில் நாளைவரும் தலைவர் வண்டி
வீழ்ந்திடுவேன் தலைவர் வரும் வண்டி மீது
வீழ்ச்சியில்லை இனி உங்களுக்கு எப்போதும்

மருதமரம் சொல்லக்கேட்டு மற்ற மரங்கள்
மனம் கலங்கின,  பிரியாவிடை கொடுத்தன
மரங்களின் தியாகி என கூறி  மருதமரத்தை
மனதாரப் போற்றினர் அனைவரும் புகழ்ந்தனர்

நேரம் போனது தலைவர் வண்டியும் வந்தது
நெடுமென  வளர்ந்த மருதமரம் வீழ்ந்தது
திடுமென வீழ்ந்த மரம் கணப் பொழுதில்
தன்னுயிர்ஈந்து தான் நினைத்ததை முடித்தது.

இடியாய் விழுந்த அடியில் யாவும் முடிந்தது
இரண்டே மாதத்தில் கட்சியும் கலைந்தது
மரங்கள் யாவும் சுதந்திரம் அடைந்தன - மருத
மரத்தை "தமிழ் மரப்போராளி" என அழைத்தன

அன்புடன் 
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home