கள்ளிமலர்

A tale of a cactus flower..

Monday, May 17, 2010

பணமென்னும் தீபத்தின் ஒளிநோக்கி



















பணத்தின் பின்னே ஓடும் நண்பர்களுக்கு எழுதியது...

பணமென்னும் தீபத்தின் ஒளிநோக்கி...

பணமென்னும் தீபத்தின் ஒளிநோக்கி
பாயும் மானிட பூச்சிகளே
மனமதில் கருணை இல்லையெனில்
மாய்ந்து போவீர் ஞாபகம்

ஓட்டம் நிறுத்தி ஓரிடம் அமர்ந்து
ஒருகணம் செய்வீர் சிந்தனை
ஆட்டம் முடிந்து போனபின்னே
ஆவிக்குநேரும் நிலைதன்னை

அடுத்தவருக்கு கெடுதல் செய்து
அளவில்லாமல் சேர்த்து வைத்து
படைத்தவனுக்கு தெரியாதென்று
பாவகாரியம் பலவும் செய்து -நீர்

ஆடும் ஆட்டம் அனைத்திற்கும்
ஆண்டவன் தீர்ப்பு உண்டு, இதை
நன்றாய் மனதில் கொள்க - மனதில்
நாளும் கருணை கொள்க

தர்மம் தலை காக்கும், கருணை
தலைமுறை, தலைமுறை காக்கும்.
கருணை கொள்ளும் உள்ளம்
கடவுள் வாழும் இல்லம்

அன்புடன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home