கள்ளிமலர்

A tale of a cactus flower..

Tuesday, May 18, 2010

புறப்படு ஈழம் புறப்படு

ஈழத்தில் வாடும் நமது இரத்த சொந்தங்களுக்காக, திருசெந்தூர் முருகனிடம் முறையிட்டு எழுதியது...

புறப்படு ஈழம் புறப்படு

புறப்படு ஈழம் புறப்படு
பொறுப்பதேன் முருகா புறப்படு

தமிழ் வளர்க்க வேண்டுமென்று
சங்கம் வைத்த இறைவா
தமிழரை நீ ஈழத்தில்
தவிக்கவிடுவது முறையா
ஆண்டியான போதும் உனக்கு
ஆறு வீடு உண்டு
ஆயிரங்கள் இருந்தும் தமிழன்
அகதியானான் இன்று
சேனையை திரட்டி சூரனை அழித்த
செந்தில் ஆண்டவா
தமிழ் மட்டும் உனக்கு வேண்டும்
தமிழன் வேண்டாமா (பாடலில் இருமுறை)

புறப்படு ஈழம் புறப்படு
பொருப்பதேன் முருகா புறப்படு


அன்புடன்
பாலா வானுமாமலை

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home